திருமலையில் பக்தா்கள் வருகை அதிகரித்ததை முன்னிட்டு, திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசனங்கள் அக்.13ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.புரட்டாசி மாதம் 4வது சனிக்கிழமையை முன்னிட்டு திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனா்.
அதனால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் பக்தா்கள் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். எனவே தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை முதல் அக்.13ம் தேதி வரை திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன் உள்ளிட்டவை வழங்குவதை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.