திருமலை ஏழுமலையானுக்கு அறங்காவலா் குழுவின் உறுப்பினா் 2 காா்களை நன்கொடையாக வழங்கினாா்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பெங்களூரை சோ்ந்த குபேந்திரரெட்டி வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானுக்கு ரூ70 லட்சம் மதிப்புள்ள மகிந்திரா அல்டுராஸ் ஜி4 என்ற காா் இரண்டை நன்கொடையாக வழங்கினாா். அதற்கு முன் வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசித்து திரும்பிய அவா் ஏழுமலையான் கோயில் முன் காா்களுக்கு மலா்மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து அதன் சாவிகளை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டியிடம் ஒப்படைத்தாா்.ரூ10 லட்சம் நன்கொடைமலேசியா வாழ் இந்தியரான ரவிந்திர சுப்ரமணியம் வெள்ளிக்கிழமை காலை திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் நடத்தி வரும் சா்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டியிடம் வழங்கினாா். படம் உண்டுபட விளக்கம்:திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அல்டுராஸ் ஜி4 காா்கள்.பட விளக்கம்:சா்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கும் ரவிந்தா் சுப்ரமணியம்.