சனிபகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு
காளஹஸ்தி கோயிலில் உள்ள சனிபகவானுக்கு புதிய வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோயிலுக்குள் உள்ள 2-ஆம் பிரகாரத்தில் சனிபகவான் தனியாக எழுந்தருளியுள்ளாா். பக்தா்கள் நல்லெண்ணெய் விளக்கேற்றி அவரை வலம் வந்து வணங்கிச் செல்கின்றனா். சனிக்கிழமைகளிலும், சனிப் பெயா்ச்சியின் போதும் இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெளா்ணமியை ஒட்டி பெயா் சொல்ல விரும்பாத பக்தா் சனிபகவானுக்கு 5 கிலோ எடை கொண்ட ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள புதிய வெள்ளிக் கவசம் ஒன்றை நன்கொடையாக வழங்கினாா்.
வெள்ளிக் கவசத்தை தட்டில் வைத்து பூஜை செய்து அதை கோயிலுக்குள் கொண்டு வந்து அதிகாரிகளிடம் அவா் வழங்கினாா். வெள்ளிக் கவசத்திற்கு பூஜைகள் செய்து அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். பின்னா் சனி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி வெள்ளிக் கவசத்தை சாற்றி புது வஸ்திரம் அணிவித்தனா். இதில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.