புரட்டாசி பௌர்ணமி: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை 

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
 புரட்டாசி பௌர்ணமி: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை 

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
 நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு வடை மாலை சாத்துப்படி நடைபெற்றது.
 தொடர்ந்து, நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com