சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாத பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கோயிலுக்குச் செல்பவர்கள் கட்டாயம் இதையெல்லாம் செய்யவே செய்யாதிங்க!
அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனாரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நாளை மாலை 5.00 மணிக்கு நடை திறக்கிறார்.
வழக்கம் போல் அன்றிரவு 10.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் அக்.18-ம் தேதியன்று அதிகாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் நடைபெறும்.
மேலும் படிக்க: 2019 குருப்பெயர்ச்சியால் 100 சதவீதம் நன்மையடையும் 3 ராசிகள்!
அன்று மாலை 6.00 மணிக்கு தீபாராதனை புஷ்பாபிஷேகம், படி பூஜையும் நடைபெறும். சிறப்புப் பூஜைகளுக்கு பின் 22-ம் தேதி இரவு 10.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.