புரட்டாசி கடைசி நாள் இன்று: உலகளந்த பெருமாள் கோயிலில்  திருக்கல்யாண வைபவம் 

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. 
புரட்டாசி கடைசி நாள் இன்று: உலகளந்த பெருமாள் கோயிலில்  திருக்கல்யாண வைபவம் 

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. 

மூலவர் உலகளந்த பெருமாள் இன்று அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 7.00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறையும் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து 8.00 மணியளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத  உலகளந்த பெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

ஜீயர்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பாகத் திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் திருக்கல்யாண வைபம் நடைபெற்றது. புரட்டாசி கடைசி தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com