திருமலையில் போதையில் ஜீப் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜீப் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: ஆந்திர மாநிலம் புலிசோ்ல பகுதியை சோ்ந்த ரஞ்ஜித்குமாா், ஜீப் ஓட்டுா். தினசரி திருப்பதி-திருமலை இடையே ஜீப் ஓட்டி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள கெளஸ்துபம் ஓய்வறை அருகில் தவறான பாதையில் சென்று ஓா் இரு சக்கரவானத்தின் மீது வேகமாக மோதினாா். இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவா் தூக்கி எறியபட்டனா். இதில் ஒருவருக்கு லேசான காயமும், மற்றொருவருக்கு படுகாயமும் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த இருவரை அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
டிரைவா் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.