பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறிவந்துள்ளது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.
பஞ்சபூதத்தலங்கள் (மினிதொடர்) - 2. திருவண்ணாமலை - http://bit.ly/2kIiV6K
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேஷமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை.
கிரிவல பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
லிங்கத்தின் பெயர் | திசை | பிரதிஷ்டை செய்தவர் | தொடர்புடைய கிரகங்கள் | வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் |
இந்திர லிங்கம் | கிழக்கு | இந்திரன் (தேவர்களின் அரசன்) | சூரியன், சுக்கிரன் | நீண்ட ஆயுள் மற்றும் புகழ் |
அக்னி லிங்கம் | தென் | அக்னி | சந்திரன் | நோய்களிலிருந்தும், பயத்திலிருந்தும் நிவாரணம் |
எம லிங்கம் | தெற்கு | எமன் | செவ்வாய் | நீண்ட ஆயுள் |
நிருதி லிங்கம் | தென் | நிருதி(அசுரர்களின் அரசர்) | ராகு | உடல் நலம், செல்வம் மற்றும் புகழ், குழந்தை பாக்கியம் |
வருண லிங்கம் | மேற்கு | வருணன் | சனி | நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக நீர் சம்பந்தபட்ட வியாதிகள்) |
வாயு லிங்கம் | வட | வாயு | கேது | நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக இதயம், மூச்சுக்குழாய், வயிறு) |
குபேர லிங்கம் | வடக்கு | குபேரன் | குரு | செல்வம் மற்றும் உன்னதமான வாழ்க்கை |
ஈசான்ய லிங்கம் | வட | ஈசான்யன் | புதன் | மனஅமைதி |
அதன்படி, ஆவணி மாத பௌர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்தது.
ஆவணி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 8.19 மணிக்குத் தொடங்கி, சனிக்கிழமை (செப்.14) காலை 10.19 மணிக்கு முடிகிறது. எனவே, இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.