மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வரும் தீபாவளி முதல் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயிலில் தினசரி அதிகாலை நடை திறந்ததில் இருந்து இரவு நடை சாத்தும் வரை இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
வரும் தீபாவளித் திருநாள்(அக்டோபர் 27) முதல் லட்டு பிரசாத விநியோகம் அமலுக்கு வருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்குவதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் லட்டு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்பட உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.