திருப்பாவை உபன்யாசம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

மார்கழி மாதம் தேவஸ்தானம் கோயில்களில் திருப்பாவை உபன்யாசம் செய்ய உபன்யாசகர்கள் விண்ணப்பிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


மார்கழி மாதம் தேவஸ்தானம் கோயில்களில் திருப்பாவை உபன்யாசம் செய்ய உபன்யாசகர்கள் விண்ணப்பிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான நடத்தி வரும் ஆழ்வார் திவ்யபிரபந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் டிச. 17-ஆம் தேதியிலிருந்து ஜன. 14-ஆம் தேதி வரை திருப்பாவை பாராயணம் செய்யவும், அதுகுறித்து உபன்யாசம் செய்யவும் உபன்யாசர்களை தேவஸ்தானம் வரவேற்றுள்ளது.
தகுதியுடைய உபன்யாசர்கள் வரும் செப். 15-ஆம் தேதி முதல் அக். 15-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் www.tirumala.org ,  www.tirupati.org  என்ற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் சிறப்பு அதிகாரி, ஆழ்வார் திவ்யபிரபந்த திட்டம், ஸ்வேதா பவனம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற முகவரிக்கு ஒப்புதல் பத்திரம், தகுதி சான்றிதழுடன் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 0877-2264447, 0877-2264083, 9908577715 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com