மகா காளியம்மனுக்கு அபிஷேகம் செய்ய பால்குடங்களை ஏந்தி வந்த பக்தர்கள்.
மகா காளியம்மனுக்கு அபிஷேகம் செய்ய பால்குடங்களை ஏந்தி வந்த பக்தர்கள்.

மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் 27 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் 27 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சிறுகாவேரிப் பாக்கம் ஜெ.ஜெ.நகரில் ஜெகதீஸ்வரி மாரியம்மன் மற்றும் நாக கன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் 27 அடி உயரத்தில் மகா காளியம்மன் சிலை 18 திருக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கின.
புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, மகா காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகளும் நடந்தன.
சிறுகாவேரிப்பாக்கம் உள்பட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் 108 பால்குடங்களை எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மதியம்  அன்னதானமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜி.ஜெயதேவ்  சுவாமிகள் தலைமையிலான  விழாக் குழுவினர்  செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com