சென்னை, கொளத்தூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 37-ம் ஆண்டு திருக்கல்யாண மஹோத்சவம் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது.
கொளத்தூர், ஜெயராம் நகர், மக்காராம் தோட்டம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ அலர்மேல் மங்கா தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண மஹோத்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 37-ம் ஆண்டு திருக்கல்யாண மஹோத்சவம் செப்டம்பர் 18-ம் தேதி புரட்டாசி 1-ம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளின் பரிபூரண கிருபாகடாக்ஷத்தைப் பெற வேண்டுமாய் பிரார்த்திக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
17.09.19 மாலை 6.00 மணிக்கு அம்பத்தூர் விநாயகர் அபிராமி மண்டலி குழுவினரின் பக்திப்பாடல் நடைபெறும்
18.09.19 காலை 8.00 மணிக்கு திருமஞ்சனமும், 9.00 மணிக்கு அருள்மிகு கன்னியம்மன் கோயில் சீர்வரிசையும் நடைபெறும். 10.00 மணிக்கு திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறும். மதியம் 1.00 மணிக்கு அன்னதானமும், மாலை 6.00 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது.