திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 80.24 லட்சம் காணிக்கையாகச் செலுத்தினர்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 5-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 40 நாள்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களாக உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினர்.
புதன்கிழமை கோயில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் ஊழியர்களால் எண்ணப்பட்டது.
இதில், ரூ.80 லட்சத்து 24 ஆயிரத்து 514 ரொக்கம், 450 கிராம் தங்கம், 17,500 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.