திருப்பதி: தேவி நவராத்திரி விழா சுவரொட்டி வெளியீடு

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள தேவி நவராத்திரி விழாவுக்கான சுவரொட்டிகளை தேவஸ்தான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். 


திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள தேவி நவராத்திரி விழாவுக்கான சுவரொட்டிகளை தேவஸ்தான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். 
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வரும் செப். 29-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை தேவி நவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதற்கான சுவரொட்டியை திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில்  செயல் இணை அதிகாரி பசந்த்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
நவராத்திரி உற்சவம் கலச ஸ்தாபனத்துடன் 29-ஆம் தேதி தொடங்கி அக். 8-ஆம் தேதி கலசாபிஷேகம், பார்வேட்டு உற்சவத்துடன் நிறைவு பெற உள்ளது. செப். 30-ஆம் தேதி முதல் அக். 7-ஆம் தேதி வரை தினமும் காலை ஸ்நபன திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. அதில், காமாட்சி அன்னை தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
நவராத்திரி அம்மன் அலங்காரங்கள்:
செப். 30    காமாட்சி அம்மன்
அக். 1     ஆதிபராசக்தி
அக். 2    அன்னபூரணி
அக். 3    மாவடி சேவை
அக். 4    லட்சுமி தேவி
அக். 5    துர்கா தேவி
அக். 6    சரஸ்வதி தேவி
அக். 7    மகிஷாசுரமர்த்தினி
அக். 8    சிவபார்வதி தரிசனம்,   பார்வேட்டு உற்சவம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com