திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள தேவி நவராத்திரி விழாவுக்கான சுவரொட்டிகளை தேவஸ்தான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வரும் செப். 29-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை தேவி நவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதற்கான சுவரொட்டியை திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் செயல் இணை அதிகாரி பசந்த்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
நவராத்திரி உற்சவம் கலச ஸ்தாபனத்துடன் 29-ஆம் தேதி தொடங்கி அக். 8-ஆம் தேதி கலசாபிஷேகம், பார்வேட்டு உற்சவத்துடன் நிறைவு பெற உள்ளது. செப். 30-ஆம் தேதி முதல் அக். 7-ஆம் தேதி வரை தினமும் காலை ஸ்நபன திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. அதில், காமாட்சி அன்னை தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
நவராத்திரி அம்மன் அலங்காரங்கள்:
செப். 30 காமாட்சி அம்மன்
அக். 1 ஆதிபராசக்தி
அக். 2 அன்னபூரணி
அக். 3 மாவடி சேவை
அக். 4 லட்சுமி தேவி
அக். 5 துர்கா தேவி
அக். 6 சரஸ்வதி தேவி
அக். 7 மகிஷாசுரமர்த்தினி
அக். 8 சிவபார்வதி தரிசனம், பார்வேட்டு உற்சவம்