திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா

திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. 
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா


திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. 

நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தன் கரத்திலுள்ள வேல் மூலம் மலை மீது பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவுகூறும் வகையில் திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா நடைபெறுகிறது. 

அதன்படி, இந்தாண்டு செப். 27-ம் தேதியன்று மூலவர் கரத்தில் உள்ள வேலுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. அதற்குபின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படும். 

பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு வேல் பல்லக்கில் வீதிஉலா சென்று மலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சுப்பிரமணியர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com