உடன்குடி: வெங்கட்ராமானுஜபுரம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது.
இக்கோயிலில் கொடை விழா செப்.22 ஆம் தேதி காலை 6 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் சமய சொற்பொழிவு, அன்னதானம், வில்லிசை, கும்பம் தெருவீதி வருதல், முளைப்பாரியுடன் கும்பம் தெருவீதி வருதல், மஞ்சள் நீராடுதல், படைகஞ்சி ஊற்றுதல், பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றறன.
செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பகவதிபாண்டி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.