வெங்கட்ராமானுஜபுரம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

வெங்கட்ராமானுஜபுரம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி
ugi25vil_2509chn_49_6
ugi25vil_2509chn_49_6

உடன்குடி: வெங்கட்ராமானுஜபுரம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது.

இக்கோயிலில் கொடை விழா செப்.22 ஆம் தேதி காலை 6 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் சமய சொற்பொழிவு, அன்னதானம், வில்லிசை, கும்பம் தெருவீதி வருதல், முளைப்பாரியுடன் கும்பம் தெருவீதி வருதல், மஞ்சள் நீராடுதல், படைகஞ்சி ஊற்றுதல், பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றறன.

செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பகவதிபாண்டி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com