இந்த வாரம் யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 27 - அக்டோபர் 3) பலன்களை..
இந்த வாரம் யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 27 - அக்டோபர் 3) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அறிவாற்றல் சற்று அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். உடல் உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவரைகலந்தாலோசித்தல் நலம் பயக்கும்.

உத்தியோகஸ்தர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே வேலைகளைச் செய்து முடிக்கவும். மனக்குழப்பத்தினால் நிதானமாகவே முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக முடியும். கூட்டாளிகளின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டுக் கிடைக்கும். எதிரிகளிடம் ஜாக்கிரதையாக  இருக்கவும். உங்களைத்தேடி உதவிகள் வரும். கலைத்துறையினர் புதிய சாதனைகளைச் செய்ய வாய்ப்புண்டு. எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்குவார்கள். ஆன்மிகச் சுற்றுலா செல்ல முனைவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். மாணவமணிகளுக்கு படிப்பில் அனுகூலமான நிலைமை தென்படும்.  

பரிகாரம்: துர்க்கை அம்மனை விளக்கேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: 2,3.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். வசீகரமான பேச்சின் மூலம் பிறரைக் கவர்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேக ஆரோக்கியம், மனோபலம் கூடும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப்பியிர் செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளலாம். 

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரித்து பெயரும் புகழும் கிட்டும். பெண்மணிகள் தங்களை நாடி வருபவர்களுக்குத் தயங்காமல் உதவி செய்து நற்பெயர் எடுப்பார்கள். 

மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டத் தொடங்குவார்கள். போதிய பயிற்சிகளை மேற்கொண்டு நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: சனியன்று வேங்கடவனை வழிபட்டு நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தேவைக்கேற்ப வருமானம் வந்து கொண்டிருக்கும். கடின உழைப்பை மேற்கொண்டால்தான் காரிய சித்தி உண்டாகும். பயணத்தின்போது எச்சரிக்கையோடு இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சிறிது சிரமத்திற்குப்பிறகே முடியும். மேலதிகாரிகளின் மறைமுகத் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். வியாபாரிகள் தன லாபத்தைக் காண்பார்கள். சிறிய முதலீடுகளைச் செய்து பெரிய லாபத்தை அடைய முயற்சிப்பார்கள். 

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற மகசூல் கிடைக்கும். சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு உழைத்து லாபம் பெறுவார்கள். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற மகசூல் கிடைக்கும். கால்நடைகளாலும் வருமானம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். அதிக செலவு செய்து கட்சிப்பணி ஆற்ற நேரிடும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: வெள்ளியன்று அம்பாளை தரிசித்து வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 29. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வாழ்க்கை வசதிகள் பெருகும். அந்தஸ்தான மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். புதிய ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்படினும் முடிவு நீங்கள் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து பிரச்னைகளைத் தவிர்க்கவும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாகும். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாகவே இருக்கும். புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் ஆலோசித்து ஈடுபடவும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால்தான் நல்ல பலனைப் பெறலாம்.

அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு தொண்டர்களின் அரவணைப்பைப் பெறுவார்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். கலைத்துறையினரைத் தேடி வாய்ப்புகள் வரும். ஒப்பந்தங்களில் பிரச்னைகள் தோன்றினாலும் முயற்சி வெற்றி தரும். 

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவார்கள். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். 

பரிகாரம்: திங்களன்று உமா மகேஸ்வரரை தரிசனம் செய்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சுபச் செய்திகள் நாடி வரும். உயர்வான நன்மைகள் உண்டாகும். மூத்த சகோதரி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். சவால்களை மனஉறுதியுடன் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை. அலுவலகப் பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். 

வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதற்கு சிரமங்கள் ஏற்படும். கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் செலவுகளை ஈடு செய்யும். 

அரசியல்வாதிகள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றியுடன் முடிப்பார்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் புதிய வெற்றிகளைக் காண்பார்கள். ரசிகர்களின்  ஆசைகளைப் பூர்த்திச் செய்வீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அடுத்தவர்களின் குறைகளை பெரிதுப்படுத்த வேண்டாம். மாணவமணிகள்  உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. 

பரிகாரம்: ராம பக்த அனுமனை வெற்றிலை    மாலை சாற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

லாபகரமான காலமிது. வாழ்க்கையில் சிறு சலிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். துணிந்து நீங்கள் செய்யும் செயல்கள் வீண் போகாது. பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் இணக்கமாக இருக்கவும். மேலும் நீங்கள் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் பெரிய சந்தைகளை நாடிச் சென்று இருக்கின்ற வியாபாரத்தைப் பெருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்க பூச்சுக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். 

அரசியல்வாதிகள் அனைத்து காரியங்களிலும் வெற்றிவாகைச் சூடுவார்கள். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்களைக் காண்பார்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். வீண் பேச்சுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் சற்று குறையும். விடாமுயற்சிகள் அனைத்தும் எதிர்பார்த்த பலனைத் தரும். 

பரிகாரம்: புதனன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாளை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

மதிப்பு மரியாதை உயரும். உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேவைக்கேற்ப உறவினர்கள் உதவுவார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைச்சுமை குறையும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகலாம். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் காண்பார்கள். விவசாயிகளுக்கு திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது.

அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். மக்களுக்கான உண்மையான போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். 

பெண்மணிகள் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் படிப்பில் பேதிய கவனம் செலுத்தவும். விளையாட்டில் புதிய யுக்திகளைப் பின்பற்றவேண்டாம்.

பரிகாரம்: செவ்வாயன்று செந்திலாண்டவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 1, 2. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமிது. பணிகளில் இடையூறுகள் தோன்றி மறையும். செய்திகள் உங்களுக்குச் சோர்வைக் கொடுக்கும். மனதை தளரவிடவேண்டாம். நூதன பழக்க வழக்கங்களால் சுற்றுச்சூழலில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களிடம் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பணவரவு சீராக இருக்கும். வியாபாரிகள் பொருள்கள் விற்பனையில் கவனம் செலுத்தவும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் சுமாராகவே இருக்கும். நீர்வரத்தால் விளைச்சல் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பொறுமையுடன் நடந்துகொள்ளவும். கடுமையான அணுகுமுறையால் தொண்டர்களின் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவுடன் கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள். கணவருடைய  உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். 

மாணவமணிகள் மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டி வரும்.  

பரிகாரம்: திங்களன்று சிவதரிசனம் செய்து நலன் களைப் பெருக்கிக் கொள்ளவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 3. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உத்தியோக விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் சொல்கேட்டு நடப்பார்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். கடுமையாக உழைத்து எதிர்பார்த்த லாபமடைவார்கள். 

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் உண்டாகலாம். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள்  எடுப்பதைத் தவிர்க்கவும். தீர ஆலோசித்து புதிய ஒப்பந்தங்கள் செய்யவும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சிறு குழப்பங்களைச் சந்தித்தாலும் இறுதியில் அதிலிருந்து விடுபடுவார்கள். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பிலும் போதிய கவனம் செலுத்தவும். 

பரிகாரம்:  சனியன்று சனீஸ்வரர், ஆஞ்சநேயரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 3. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலப்படும். தொழிலில் முன்னேற்றம் தென்படும். வீண் விரயங்களும் செலவுகளும் ஏற்படும். வீடு மாற்றும் எண்ணமுள்ளவர்களுக்கு இது உகந்த காலம்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே இருந்து வருவார்கள். அவர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். 

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும். 

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். மாற்றுக் கட்சியினரும் உங்களை பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டாகும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். மாணவமணிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறவும்.

பரிகாரம்: வெள்ளியன்று பெருமாள்} தாயாரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 2. 

சந்திராஷ்டமம்: 27.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

ஆன்மிக சிந்தனைகள் மனதிலும் உடலிலும் உற்சாகத்தைக் கொடுக்கும். பணவரவு இருந்தாலும் சிறு விரயங்களும் ஏற்படும். மனக்கவலைகளால் வேலைகளில் இடையூறுகள் உண்டாகலாம். மனதை ஒருநிலைப் படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகள் இழுப்பறியாகத்தான் இருக்கும். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்காது.   வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக முடியும். போட்டி, பொறாமைகள் இருக்குமாதலால் கவனத்துடன் செயல்படவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். 

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையை பயன்படுத்தி நற்பெயர் எடுக்கவும். கலைத்துறையினருக்கு பல நாள்களாகத் தடைபட்டுவந்த செயல்கள் வெற்றியுடன் முடிவடையும்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் படிப்பில் சற்று பின்தங்கிய நிலையில் இருப்பார்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 1. 

சந்திராஷ்டமம்: 28, 29.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சீரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வேலைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தவும். வரவுக்கேற்ற செலவு செய்வது நல்லது. இது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் விரைவில் அது விலகிவிடும். 
வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடையலாம். கூட்டாளிகளிடமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு இது லாபகரமான காலமாகும். மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு வருமானம் பெருக்கவும். 

அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். எதிரிகளும் அடங்கி இருப்பார்கள். 

கலைத்துறையினருக்கு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆர்வம் அதிகரிக்கும். பெண்மணிகள் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பார்கள். குடும்பத்தாரிடம் மனம் விட்டுப் பழகி அனுசரணையாக இருக்கவும். மாணவமணிகள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். 

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 2. 

சந்திராஷ்டமம்: 30, 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com