ஸ்ரீபெரும்புதூா்: மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
மாகாளய அமாவாசையான இன்று ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று வேத விற்பன்னர்கள் முன்னிலையில் தங்களது முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.