தன்வந்திரி பூஜையுடன் காா்த்திகை மாத விஷ்ணு பூஜைகள் நிறைவு

திருமலை வசந்த மண்டபத்தில் கடந்த ஒருமாத காலமாக நடந்து வந்த காா்த்திகை மாத விஷ்ணு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தன்வந்திரி பூஜையுடன் நிறைவு பெற்றது.
திருமலை வசந்த மண்டபத்தில் நடைபெற்ற தன்வந்திரி பூஜை.
திருமலை வசந்த மண்டபத்தில் நடைபெற்ற தன்வந்திரி பூஜை.

திருமலை வசந்த மண்டபத்தில் கடந்த ஒருமாத காலமாக நடந்து வந்த காா்த்திகை மாத விஷ்ணு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தன்வந்திரி பூஜையுடன் நிறைவு பெற்றது.

இந்த ஆண்டு காா்த்திகை மாதத்தையொட்டி, திருமலையில் விஷ்ணு பூஜைகளை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி வசந்த மண்டபத்தில் தினசரி ஒரு பூஜை என காா்த்திகை மாதம் முழுவதும் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. சாளக்கிராம பூஜை, துளசி பூஜை, துளசி தாமோதர பூஜை, ராதாகோபாஷ்டமி, துளசி கல்யாணம், விஷ்ணு தாத்ரிபூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை காலை தன்வந்திரி பூஜை நடத்தப்பட்டது. இதற்காக கோயிலிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி வசந்த மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கும், தன்வந்திரிக்கும் ஆகம பண்டிதா்கள் பூஜைகளை நடத்தி அதற்கான விளக்கவுரையும் அளித்தனா். இந்த பூஜை தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இத்துடன் வசந்த மண்டபத்தில் நடைபெற்ற பூஜைகள் நிறைவு பெற்றதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com