மாயனின் தோற்றம் கொண்ட கருநாக ராகு

இந்த பிரபஞ்சத்தில் மாயத்தின் தாக்கம் அதீதமாக உள்ளது. கிரகங்களில் வீடற்ற, முழு உருவமற்ற, உணர்வுள்ள ராகு எங்கெல்லாம் மாயை கொண்டுவருவாரோ அங்கெல்லாம் மறைந்து கண்ணிற்குத் தெரியாதவற்றைச் செயல்படுத்துவார்.
மாயனின் தோற்றம் கொண்ட கருநாக ராகு

இந்த பிரபஞ்சத்தில் மாயத்தின் தாக்கம் அதீதமாக உள்ளது. கிரகங்களில் வீடற்ற, முழு உருவமற்ற, உணர்வுள்ள ராகு எங்கெல்லாம் மாயை கொண்டுவருவாரோ அங்கெல்லாம் மறைந்து கண்ணிற்குத் தெரியாதவற்றைச் செயல்படுத்துவார்.

அனைவருக்கும் புரியும்படி கூறவேண்டுமானால் பணம் ஒருவருக்குத் தேவை. ஆனால் அவனுக்கு அதீத தேவையைத் தூண்டும் ஒரு தூண்டில்காரன். அதேபோல் ஒரு மனைவியோடு வாழ்ந்தால் போதும் என்று இல்லாமல் ஒன்று அல்லது பல்வேறு பெண்ணை தேடும், இச்சையைத் தூண்டும் ஒரு போகக் காரகன் ராகு. இவற்றிலும் ஒரு சூட்சமம் உண்டு சுக்கிரனோடு, பாவத்துவம் கொண்ட சந்திரனோடு கைகோர்த்து 2,3,7,11 பாவத்தோடு தொடர்பு கொண்டால் மாறுபட்ட மோகத்தை, மனதின் தாக்கத்தை ராகு ஏற்படுத்துவார்.

ராகு ஏமாற்றும் தன்மை கொண்ட ஒரு மாய கிரகம். எந்த வழியிலாவது சுலபமான முறைகளில் - ஏராளமான வருமானத்தைத் தரும் கூடவே சாதுரியமாக ஏமாற்று செயல்பாடுகளைச் செயல்படுத்துவான். அதுவும் அந்தெந்த பாவத்திற்கு ஏற்ப மற்றும் கூட்டாளிகளுக்கு ஏற்ப மாறுபடும். 

ராகுவிடம் கெட்ட செயல்களை மட்டும் பார்க்க முடியாது. எல்லாரிடமும் ஒரு கெட்டது என்றால் மறுபக்கம் நல்லதும் உண்டு. மாயை என்ற இந்த காற்றை நல்ல குடுவையில் போட்டுச் சுத்தப்படுத்தவும் முடியும்.  ஒருசில ஜாதகங்களில் காணலாம்.

ஆன்மீக - சண்டாள ராகு:

பெரிய மகான்கள் ஜாதகத்தில் ராகுவின் சேர்க்கையோ, பார்வையோ பெற்ற சுபக்கிரகம் பலம் பெற்று பன்மடங்கு ஆன்மீக தெய்வீக ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கி உலகிற்குக் கொடுத்த பல்வேறு குருக்களும் ஞானிகளும் நம் பிரபஞ்சத்தில் பிறந்துள்ளனர்.

அறிவியல் ஆராய்ச்சியில் ராகுவின் பங்கு: 

விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில்  தேவைப்படும் புத்தி, உழைப்பு அதன்வழியான மருத்துவம் என்ற காரக கிரகங்களுடன் சேரும் ராகு முழு சுபத்துவத்துடன் தன் பாவத்துணையுடன் ஆராய்ச்சியில் வெற்றிவாகை சூடுவார். 

தற்பொழுது மாயை என்கிற நிழல் கிரக வாயிலில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு உண்டு. நம் அன்றாட வாழ்வில் xray , CT scan, MRI etc.. கணினி மூலம் ஊடுருவும் அனைத்தும் ராகு மனித உடலில் உள்ள பின்னி பிணியும் கூறுகளை (enlarge) அதிகமாகவும் சுருக்கம் ஏற்படுத்துவது (shrink) ராகு கேதுவின் வேலை ஆகும். ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க ராகு முக்கிய பங்கு என்று கூறலாம்.

பிரம்மாண்ட ராகு: 

ஒரு சினிமா துறையில் ஒருவன் பிரம்மாண்ட அளவிடமுடியாத அளவுக்குப் படம் எடுக்க ஒரு மூலக்கூறு ராகு ஆவார். அதுவும் அந்த ஜாதகருக்கு பிராரப்தத்தின் அடிப்படையில் - சுக்கிரன் மற்றும் ராகுவின் தசை நன்றாக இருந்தால் உலகையே பேசச் செய்வதும் ராகுவே ஆவார்.

புதிய கண்டுபிடிப்பு (new innovation): ஒரு மாணவன் புதியன செயல்படுதல் மற்றும் புது வரவு, புதிய ஆராய்ச்சிக்கு ஊக்கியாக ராகுவின் துணை ஜாதகனுக்கு முக்கிய தேவை. மறைந்த விஷயங்களை ஆராய்ச்சியில் ஈடுபட வைப்பவர் ராகு.

புதியன புகுதல்:

ஒரு ஜாதகன் தன் தொழிலில் பன்மடங்கு பெறுக மற்றும் புது வரவு செயல்படுத்துபவனாக ராகு வழிகாட்டு துணையாக இருப்பான். புதிய விஷயம் அதாவது சனி பார்வை இருப்பதால் தொழில் சார்ந்த விஷயம் கற்பீர். பத்தில் ராகு இருப்பது நன்று என்று ஜோதிடத்தில் ஒரு கூற்று. தொழிலை சரிவரச் செயல்படுத்தாத நிலையிலும் ஜெனன ஜாதகத்தில் 10-ல் இருக்கும் ராகு ஊக்குவிப்பர்.

நோயின் தாக்கத்தை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துதல், புது உறவு உருவாதல் என்று ராகுவின் பெருமையை அடுக்கிக் கொண்டு போகலாம். ராகு எந்த பாவத்தில் இருக்கின்றதோ அந்த பாவத்தின் மோகம் நிறைவேறாத ஆசை அந்த வீட்டின் அதிபதி நோக்கி காரக கிரகம் செயல்படும். ராகு 3,6,10,11 பாவங்களிலிருந்தால் நன்று என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. 

அதுவும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் ராகு இருந்து, அந்த ராகுவுக்கு கேந்திரங்களில் ஒரு கேந்திரம் கூட பாக்கியமில்லாமல் வேறு கிரகங்கள் அமர்ந்திருந்தால் அது பர்வத யோகம் எனப்படும். இந்த ராஜயோகத்தில் பிறந்த ஜாதகருக்கு பெரும் பொருள் உள்ளவனாகவும், பூப்படுக்கையில் நித்திரை புரிகின்ற மற்றும் இதைச் சார்ந்த இதர யோகங்களும் அனுபவிப்பவனாகவும் இருப்பான் என்று ஜாதக அலங்காரத்தில் சொல்லப்படுகிறது.

கேளப்பா யின்னமொரு புதுமை கேளு

கனமான கரும்பாம்பு கேந்திரகோணம்

ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட

அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்

சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த

சிவசிவா கிளர்யோகம் திடமாய் செப்பு

கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க

குமரனுக்கு அனுதினமும் பலனைக் கூறே.  

                                              -புலிப்பாணி

கரும்பாம்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு கேந்திர / திரிகோண ஸ்தானங்களிலோ சுபக்கிரகங்களின் பார்வை இருக்குமானால், சிவனருளினால் இந்த ஜாதகர் பெரும் செல்வந்தராக மற்றும் பெரும் யோகம் பெற்றவராவார். இதனை லக்னாதிபதி வைத்துக் கணித்து பலன் கூற வேண்டும் என்பது இப்பாடலின் பொருள்.

ஒன்றை பன்மடங்கு ஆக்கும் வல்லமை கொண்டவர் ராகு, ஆனால் பன்மடங்கை ஒன்றுமில்லாது முற்றுப் புள்ளி என்ற மாயை தருபவர் கேது ஆவர். அதனால் தான் அவரை ஆரம்பமான தலையுடன் கொண்ட கரு நாகமாக ராகுவாகவும் மற்றும் முடிவுடன் கூடிய கடைசி புள்ளியாகச் செம்பாம்பு கேதுவாகவும் பழம்பெரும் காவியங்களில் கூறப்படுகிறது. 

ஒருவர் நடந்தே சென்றவர் திடீரென்று விமானத்தில் சென்றார் என்றால் அங்கு ராகு வேலை செய்வதாக அர்த்தம். கோணி பாயில் படுக்கும் ஒருவரைப் பஞ்சு மெத்தையில் சுகமாகப் படுக்கவைக்க ராகுவால் தான் முடியும். மற்ற கிரகங்கள் திடீர் மாற்றத்தைத் தரமுடியாது. ராகுவால் மட்டும் தான் இந்த மாற்றத்தைச் செயல்படுத்த முடியும். ராகு என்பவர் ஒரேயடியாகப் பொன், பொருள், புகழ் அனைத்தையும் கொடுத்து மேலே தூக்கி வைக்கும் ஒரு அதிர்ஷ்ட பாம்பு என்று சொல்லலாம். 

எடுத்துக்காட்டாக இவருக்கு உகந்த உளுந்தை எடுத்துக் கொண்டால் கொஞ்சம் போட்டு அரைத்தால் எப்படி பன்மடங்கு ஆகுகிறதோ அப்படி ரெட்டிப்பு ஆகும் தன்மை ராகுவிற்கு உண்டு. 

அனைத்தும் என் குருவிற்கு சமர்ப்பணம்

- ஜோதிட சிரோன்மணி தேவி 
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com