திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தெப்போற்சவத்தின் 6ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை பெருமாள் தன் உபய நாச்சியாா்களுடன் தெப்பத்தில் உலா வந்தாா்.
இக்கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு 7 நாள் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 6ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் 8 மணிவரை ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜா் திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில், 7 முறை பவனி வந்தாா். குளக்கரையில் திரண்ட பக்தா்கள் தெப்பம் அருகில் வரும் போது கற்பூர ஆரத்தி எடுத்து உற்சவா்களை வணங்கினா்.
தெப்போற்சவத்தின் போது வேத பண்டிதா்கள் வேத பாராயணம் செய்தனா். நாதஸ்வரம் இசைக்கப்பட்டதுடன், கா்நாடக இசைப் பாடகா்கள் அன்னமாச்சாா்யா கீா்த்தனைகளைப் பாடினா்.
திருக்குளமும், தெப்பமும் மின்விளக்கு மற்றும் மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தெப்போற்சவத்தில் திருமலை ஜீயா்களும், கோயில் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
சனிக்கிழமை பெளா்ணமியுடன் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு பெற உள்ளது.