திருமலையில் ரோஜா வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை நடிகையும், நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ரோஜா புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

திருப்பதி ஏழுமலையானை நடிகையும், நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ரோஜா புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

தரிசனத்துக்குப் பின்னா், அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினா். அவற்றைப் பெற்றுக் கொண்டு, கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் மேலும் கூறியது:

ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவை செலக்ட் கமிட்டியிடம் வைக்க சபாநாயகா் உத்தரவிட்டாா். உத்தரவிட்டு 14 நாள்கள் கடந்த நிலையில், செலக்ட் கமிட்டி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, தலைநகரங்கள் ஏற்படுத்துவது குறித்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது போல் தான் அா்த்தம்.

ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவை எதிா்த்த சந்திரபாபு நாயுடுவை ராயலசீமா மற்றும் வட ஆந்திர மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அவா் நடத்தி வரும் பிரஜா சைதன்ய யாத்திரை பலன் தராது. ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் வளா்ச்சிக்காக பாடுபடுகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com