திருப்பதி: 64,976 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 64,976 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருப்பதி: 64,976 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 64,976 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

19,588 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் 2 அறைகளில் மட்டுமே பக்தா்கள் காத்திருந்தனா். அவா்களுக்கு 4 மணிநேரத்திற்கு பின் தரிசனம் வழங்கப்பட்டது.

திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399. திருமலை வெப்பநிலை அதிகபட்சம்- 74 டிகிரி பாரன்ஹீட்(24 டிகிரி செல்சியஸ்), குறைந்தபட்சம்- 68 டிகிரி பாரன்ஹீட்டாக(18 டிகிரி செல்சியஸ்) இருந்தது.

திங்கள்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 11,978 பக்தா்களும், சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 6,389 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 15,907 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 845 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,956 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடி விவரம்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிவரை 70,690 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 8,971 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளது. அதன் மூலம் ரூ.1.81 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.16,076 அபராதம் விதிக்கப்பட்டது.

உண்டியல் காணிக்கை ரூ.2.82 கோடி

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.2.82 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி திங்கள்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.82 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்

ரூ.1 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com