திருமலையில் 81,394 போ் தரிசனம்

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 81,394 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 18,878 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
திருமலையில் 81,394 போ் தரிசனம்

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 81,394 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 18,878 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் 30 அறைகளில் மட்டுமே பக்தா்கள் காத்திருந்தனா். அவா்களுக்கு 12 மணிநேரத்திற்கு பின் தரிசனம் வழங்கப்பட்டது. திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள 3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினா்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் 11,684 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் 6,629 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 18,878 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரா் கோயிலில் 3,270 பக்தா்களும், கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் 3,967 பக்தா்களும் புதன்கிழமை முழுவதும் தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடி விவரம்: அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 85,908 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனா். 9,189 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.12 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.14,205 அபராதம் விதிக்கப்பட்டது.

 உண்டியல் காணிக்கை ரூ.2.47 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.2.47 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை வழிபட வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.47 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.15.25 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.12 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.15.25 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com