திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா 11-ம் நாள் இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்.28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் மார்ச்.8-ம் தேதியும், தெப்பத் திருவிழா திங்கட்கிழமையும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மனுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை நடுமண்டபத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.