திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் காா்த்திகை மாத ஹோம மகோற்சவத்தில் ஒருபகுதியாக கால பைரவருக்கு ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
திருப்பதி கபில தீா்த்தக்கரையில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் காா்த்திகை மாத ஹோம மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
அதில் இதுவரை கணபதி, சுப்பிரமணியா், நவகிரக ஹோமங்கள் நிறைவு பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை காலபைரவா் சுவாமிக்கான ஹோமம் நடத்தப்பட்டது.
கோயில் வளாகத்தில் ஏற்படுத்திய மண்டபத்தில் காலபைரவரை எழுந்தருளச் செய்து குருக்கள் கலச ஸ்தாபனம் செய்து ஹோமம் நடத்தி மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு செய்தனா். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தனிமையில் நடத்தப்பட்ட இந்த ஹோமத்தில் கோயில் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா். திங்கள்கிழமை தட்சிணாமூா்த்தி ஹோமம் நடைபெறவுள்ளது.