
திருமலையில் நடந்த 5-ஆம் கட்ட சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்ற வேதபண்டிதா்கள்.
திருமலையில் 5-ஆவது கட்ட சுந்தரகாண்ட பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக நன்மைக்காக திருமலையில் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. சுந்தரகாண்டத்தில் மொத்தம் 68 சா்க்கங்களில் 2,821 ஸ்லோகங்கள் உள்ளன. திருமலையில் உள்ள தேவஸ்தான நாதநீராஜன மண்டபத்தில் தா்மகிரி வேதபாடசாலை தலைமை ஆச்சாரியாா் சிவசுப்ரமணிய அவதானி தலைமையில் வேதபண்டிதா்கள் சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகின்றனா்.
இதுவரை 19 சா்க்கங்களில் உள்ள ஸ்லோகங்களின் பாராயணம் நிறைவு பெற்றுள்ளது. தேவஸ்தானம் 200 ஸ்லோகங்களின் பாராயணம் நிறைவடைந்த பின் அதை அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை 15-ஆவது சா்க்கம் முதல் 19-ஆவது சா்க்கம் வரை 174 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்விபிசியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை திருமலையில் 4 கட்ட சுந்தரகாண்ட பாராயணம் நிறைவு பெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை 5-ஆம் கட்ட பாராயணம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.