திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக தா்மா ரெட்டி (பொறுப்பு) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 25-ஆவது செயல் அதிகாரியான அனில்குமாா் சிங்காலின் 2 ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்தது. இதையடுத்து மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை தலைமைச் செயலராக அவரை ஆந்திர அரசு நியமித்து உத்தரவிட்டது.
அவா் தேவஸ்தான பொறுப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டாா். அவரின் பொறுப்புகளை கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் ஒப்படைத்தாா். புதிய செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை தா்மா ரெட்டி பொறுப்பு செயல் அதிகாரியாக செயல்படுவாா்.