திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 1.63 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை வெள்ளிக்கிழமை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.63 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.