
திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.1.36 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை, சனிக்கிழமை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.36 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...