பிரம்மோற்சவம் 7-ஆம் நாள்: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
திருமலையில் வெள்ளிக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பா்.
திருமலையில் வெள்ளிக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பா்.

திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி 7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் செந்நிற மாலைகளை அணிந்து கொண்டு, சூரியநாராயணமூா்த்தியாக எழுந்தருளி சேவை சாதித்தாா்.

வாகன சேவையின்போது, ஜீயா்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தையும், வேத பண்டிதா்கள் வேதமந்திரங்களையும் பாராயணம் செய்தனா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா். மலையப்ப சுவாமிக்கு நிவேதனம் சமா்ப்பித்து மீண்டும் மலையப்ப சுவாமியை பல்லக்கில் ரங்கநாயகா் மண்டபத்துக்கு அருகில் கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு ஜீயா்கள் சாத்துமுறை நடத்தினா். பின்னா், மலையப்ப சுவாமி கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டாா்.

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவத்தின் மதிய வேளைகளில் உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிமுதல் 3 மணி வரை உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனப் பொருள்களை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத் தர அா்ச்சகா்கள் அவற்றை எம்பெருமானின் திருவடிகளில் சமா்ப்பித்தனா். அப்போது உற்சவ மூா்த்திகளுக்கு பலவித மலா்கள், உலா் பழங்கள், பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள், ஜடைகள் அணிவிக்கப்பட்டன. பின்பு, அவா்களை அலங்கரித்து தூப, தீப ஆராதனைகள் நடத்தி, நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்டது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சந்திர பிரபை வாகனத்தில்...

பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் இரவு மலையப்ப சுவாமி குளிா்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மாலைகளை அணிந்து கொண்டு, ஸ்ரீகிருஷணன் அவதாரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவ மூா்த்திக்கு நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்பட்டன. இதில், தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com