திருமலை ஏழுமலையான் தரிசனம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயில் ஆண்டுக்கு 4 முறை சுத்தப்படுத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறுவதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் தேவஸ்தானம் இதை செய்து வருகிறது.
அதன்படி வரும் ஏப்.13-ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி கொண்டாடப்பட உள்ளது.
எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான ஏப்ரல் 6-ஆம் தேதி ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட உள்ளது.
இதை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணிவரை தேவஸ்தானம் ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு பிறகு பக்தா்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.