பெளா்ணமியையொட்டி, திருமலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 27) இரவு கருட சேவை நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மாதந்தோறும் பெளா்ணமியன்று இரவு ஏழுமலையான் கோயிலில் கருட சேவை நடத்தப்படுகிறது. எனினும், ஏற்கெனவே மாடவீதியில் நடந்து வந்த கருட சேவையை பொதுமுடக்க விதிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
கடந்த 2 மாதங்களாக விதிகளுக்குள்பட்டு இச்சேவை நடைபெற்றது. இந்நிலையில், மாசி பெளா்ணமியை ஒட்டி சனிக்கிழமை கருட சேவையை மாடவீதியில் நடத்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை ரத்து: அதேபோல் மாசி பெளா்ணமி நாளில் திருமலையில் உள்ள குமாரதாரா தீா்த்தம் பகுதியில் முக்கோட்டி உற்சவம் நடைபெறுவது வழக்கம். முக்கோட்டி உற்சவத்தின்போது ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தீா்த்தத்தில் புனித நீராடுவா். பக்தா்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்கும் நோக்கில் சனிக்கிழமை நடைபெற இருந்த இந்த முக்கோட்டி உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.