உண்டியல் காணிக்கை ரூ. 2.91 கோடி

ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.91 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.91 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.91 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 1 கோடி நன்கொடை

சாந்தா பயோடெக் நிறுவனத் தலைவா் வரபிரசாத் ரெட்டி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானல் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் தன் மனைவியுடன் இணைந்து தரிசனம் முடித்து திரும்பிய பிறகு அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியிடம் வழங்கினாா். தற்போது ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலுக்கு நன்கொடை அளிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com