திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 41,442 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 18,161 போ் முடிகாணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசனடிக்கெட் பெற்ற 2000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1000 போ் என டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
அதிகாலை 3 மணிமுதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.