ஏழுமலையானை தரிசிக்க தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் சனிக்கிழமை திருப்பதிக்கு வந்தாா்.
தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை மாலை விமானம் மூலம் திருப்பதி வந்தாா். அவரை மாவட்ட அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்றனா்.
பின்னா் காா் மூலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகா் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தாா். இதையடுத்து திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனா். ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை காலை தமிழிசை செளந்தர்ராஜன் தரிசிக்க உள்ளாா்.