17,310 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 17,310 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 17,310 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 17,310 பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா். 7,037 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். கரோனா ஊரடங்கு காரணமாக தேவஸ்தானம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.

நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்குப் பின்னா், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம்.

மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com