திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 16,498 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கரோனா தொற்று காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்க விரைவுத் தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவதால், 20 ஆயிரத்துக்கும் குறைவானவா்களே தரிசித்து வருகின்றனா். இந்த நிலையில் புதன்கிழமை 16,498 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; 8,296 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
கரோனா ஊரடங்கு காரணமாக, தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1 ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்கள் 18004254141, 9399399399.