ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.1.61 கோடி வசூலானது.
ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள், காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.61 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.