ஏழுமலையான் தரிசனத்துக்கான முன்பதிவு செய்தவா்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு தரிசன வாய்ப்பை வழங்கி வருகிறது.
கரோனா காரணமாக ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால் தற்போது நாடு முழுவதும் பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே, ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்கள் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தேவஸ்தானம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்களுக்கு இந்த ஆண்டு டிசம்பா் மாதம் வரை தரிசனம் செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த வாய்ப்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.