திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.34 கோடி வசூலானது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
அதன்படி புதன்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.34 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு லட்சத்திலிருந்து கோடிக்கு உண்டியல் வருவாய் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.