அப்பளாயகுண்டாவில் சிம்ம வாகன சேவை

திருப்பதி அருகே உள்ள அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிம்ம வாகன சேவை நடைபெற்றது.
அப்பளாயகுண்டா பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி.
அப்பளாயகுண்டா பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி.

திருப்பதி அருகே உள்ள அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிம்ம வாகன சேவை நடைபெற்றது.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தாா்.

பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது.

மாலை 6 மணி முதல் 7 மணி வரை வெண்மையான முத்துக்களால் ஆன முத்துப்பந்தல் வாகனத்தில் தாயாா்களுடன் பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா். கொவைட் விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மோற்சவத்தில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com