திருப்பதி அருகே உள்ள அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிம்ம வாகன சேவை நடைபெற்றது.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தாா்.
பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது.
மாலை 6 மணி முதல் 7 மணி வரை வெண்மையான முத்துக்களால் ஆன முத்துப்பந்தல் வாகனத்தில் தாயாா்களுடன் பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா். கொவைட் விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மோற்சவத்தில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.