திடீர் யோகம் காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (ஏப்.30-மே 6)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 30 - மே 6) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
மார்ச் மாதப் பலன்கள்
மார்ச் மாதப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 30 - மே 6) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திடீர் யோகத்தால் தனவரவுகள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பது உத்தமம். தாய் மாமன் வழி உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது.  

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று ஜாக்கிரதையாகவே ஈடுபட வேண்டும். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருப்பதால் கழனிகளை விரிவுபடுத்த எண்ணுவீர்கள். கடின உழைப்பால் அதிக லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடம் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். எனவே அனைத்து விஷயங்களிலும் கவனமாக ஈடுபட வேண்டும். கலைத்துறையினருக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் பெருக வாய்ப்பு உண்டு. 

பெண்மணிகள் உறவினர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகம் மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த கவனம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 01, 02. சந்திராஷ்டமம்: 30.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சற்று குழப்பமான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி ஏற்படும். பயணத்தின் போது மிகவும் கவனம் அவசியம்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். வியாபாரிகள் உழைப்புக்குத் தகுந்த பலனைப் பெறுவீர்கள். பல்வேறு பிரச்னைகளும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் தீரும். விவசாயிகள் உழைப்பால் மிக லாபமடைவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினர் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பெண்மணிகள் மன அமைதி குறையும்படியான சூழல் ஏற்படும். யோகா, தியானம், பிராணாயாமம் போன்ற கலைகளைக் கற்று அதன்படி நடந்து கொள்ளவும். மாணவமணிகளுக்கு சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 30, 03. 

சந்திராஷ்டமம்: 01, 02.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொலைதூரத்திலிருந்து சுபச் செய்திகள் வந்து சேரும். கோபத்தையும், வீண் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படும். பிறரால் தொந்தரவுகளும் அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிக்கப் பாடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இராது. வியாபாரிகள் நிறைய சிரமங்களைச் சந்திப்பீர்கள். பெரிய பாதிப்புக்குள்ளாகி தப்பித்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் அதிகரிக்கும். நல்ல வருமானம் உண்டாகும். கால்நடைகளாலும் லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் நற்பெயர் வாங்குவீர்கள். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினர் மிகவும் அவசியமான பயணங்களை மட்டும் மேற்கொள்வது உசிதம். தகுந்த பாதுகாப்புடன் கலைநிகழ்ச்சிகளுக்கு செல்லுங்கள். 

பெண்மணிகளுக்கு பண வரவு சற்று கடினமாகவே இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மாணவமணிகள் அன்றாட பாடங்களில் கவனம் செலுத்துங்கள். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும்.

பரிகாரம்: மகான்களை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 05. 

சந்திராஷ்டமம்: 03, 04.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எடுத்த காரியத்தை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நல்லோர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடப்பீர்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். பிரச்னைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களின் சமயோஜிதப் புத்தியை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வரவேண்டிய பணமும் வந்து சேரும். வியாபாரிகளுக்கு தொழிலில் திருப்பங்கள் ஏற்படும். புதிய கிளைகளைத் திறப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளைக் கவனத்துடன் பராமரிக்கவும். தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் வந்து சேரும். பெயரும் புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழிலில் அங்கீகாரமும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கக்கூடும். உடன் மருத்துவரை அணுகுங்கள். மாணவமணிகள் நீண்டகாலத் திட்டங்கள் தீட்ட இது தகுந்த காலம் ஆகும். உடன் படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பழகுங்கள். உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஸ்ரீ மகாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 01, 04. 

சந்திராஷ்டமம்: 05, 06.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மற்றபடி வீண் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். 

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு நிம்மதி தரும் இடமாற்றங்களும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளிடம் ரகசியம் எதுவும் பேச வேண்டாம். செலவு செய்யும் நேரத்தில் மிகவும் கவனமாக இருப்பது நலம். விவசாயிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும்.  

அரசியல்வாதிகளுக்கு எல்லா விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். கலைத்துறையினருக்கு பணவரவு எதிர்பார்த்த அளவு இருந்தாலும் புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையக் கூடும். 
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் ஏற்பாடாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். மாணவமணிகள் பிறரிடம் பேசும் நேரத்தில் கவனம் கொள்க. அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். படிப்பில் அக்கறையை கூட்டிக் கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீ சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 30, 06. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் தொழிலில் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்க. அடுத்தவருக்கு ஜாமீன் தருவதை அடியோடு தவிர்க்கவும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லைகள் சற்று கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பத்தகாத இட மாற்றங்களும் சிலருக்கு உண்டாகும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடவும். தங்கள் முயற்சிக்குத் தகுந்த லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளை எடுக்கலாம். கால்நடைகளால் லாபம் வரும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் குறை சொல்பவர்களைக் கண்டு ஒதுங்குங்கள். அதிக முயற்சியினால் சில ஒப்பந்தங்கள் கைகூடும். 

பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக்காப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவமணிகள் அதிகமான முயற்சி செய்து அதிக மதிப்பெண்களைப் பெற பாடுபடுவீர்கள். கல்வியில் சற்று முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பரிகாரம்: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 02, 03. 

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணவரவு திருப்திகரமாக இருக்கும்.  உறவினர்களால் நன்மைகள் உண்டாகாது. குறிப்பாக தாய் வழி உறவினர்களால் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகும். சிறு உடல் உபாதைகள் ஏற்படும். அதனால் எதிலும் நிதானமாக செயல்படவும். 

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். அனைத்து வேலைகளையும் திட்டமிட்டது போல் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளை நன்கு யோசித்து செயல்படுத்தவும். கொடுக்கல்}வாங்கலில் சிறிது சிரமங்கள் ஏற்பட  வாய்ப்பு உண்டாகும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி குறையும். இருந்தாலும் கால்நடைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் அங்கீகாரம் கிடைக்கும். எந்தப் பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் நிறைய கிடைக்கும். சம்பள விஷயத்தில் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மாணவமணிகள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு பரிசு பெறுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 03, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நெடுநாளைய எண்ணம் ஒன்று நிறைவேறும். பெரியோர்களின் தொடர்பும் ஆன்மிக ஈடுபாடும் ஏற்படும். நல்ல நண்பர்களின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் செல்வாக்கு படிப்படியாக உயரும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். ஊதிய உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் புதிய  உக்திகளைப் பயன்படுத்தி விற்பனையைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். நீர் வரத்து அதிகமாகவே காணப்படும். மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று செயல்களில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த முக்கிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். 

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளால் மிக மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். விரும்பிய மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 02, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். சிலருக்கு அபூர்வ சக்திகள் ஏற்படும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம், வேலை மாற்றம் அமையும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வியாபாரிகள் சிறு முதலீடுகளில் ஈடுபட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடின உழைப்பால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு நீர்ப் பாசன வசதிகள் நன்றாக இருக்கும். விளைச்சல் அமோகமாக இருக்கும்.  

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது பட்டுக்கொண்டே இருக்கும். புதிய கெüரவம், அந்தஸ்து கிடைக்கும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் அன்பு மேலோங்கி இருக்கும். சக கலைஞர்களுக்கான உதவிகளையும் செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் போதிய பயிற்சிகளை மேற்கொண்டு அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 05, 06. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்பாடுகளில் முக்கிய திருப்பங்களைக் காண்பீர்கள். அளவுக்கு மீறிய ஆசைகளைத் தவிர்த்து விடுங்கள். இதுவரை தாமதித்த செயல்களைத் துரிதப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சுமூகமாகப் பழகுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும். பராமரிப்பு செலவுகளும் அதிகரிக்கும். புதிய குத்தகை எடுக்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. 

அரசியல்வாதிகளின் பேச்சுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும். பேச்சில் கவனம் கொள்க. கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். உங்கள் படைப்புகளில் ஆற்றல் அதிகரிக்கும்.  

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை மேம்படும். தாய்வழி உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் புது தெம்புடன் கவனமாகப் பாடங்களைப் படிக்கவும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா மற்றும் உடற்பயிற்சிகளைச் செய்யவும்.

பரிகாரம்: ஸ்ரீ சிவ பெருமானை வழிபடவும். 

அனுகூலமான  தினங்கள்: 03, 05. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கடின உழைப்பிற்கு பிறகே வெற்றி உங்களைத் தேடி வரும். எவருக்கும் வாக்கு கொடுப்பதோ, ஜாமீன் போடுவதோ வேண்டாம். உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தற்போது வருவது கடினம். உங்கள் முயற்சிகளைக் கைவிடாதீர்கள். வியாபாரிகள் தேவைக்கேற்ற பொருள்களை மட்டும் வாங்கி விற்பனை செய்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளைப் பெற்று லாபத்தைப் பெருக்குவீர்கள். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் திருப்திகரமாக முடியும். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கண்டத்திற்கு ஆளாக நேரிடும். கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு உங்கள் படைப்புகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் வந்துசேரும். 

பெண்மணிகளுக்கு கணவரிடத்தில் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மாணவமணிகள் விளையாடும் நேரத்தில் கவனம் தேவை. படிப்பில் ஆர்வத்தைக் கூட்டிக்கொள்ளவும். 

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 30, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வழக்குகள் சாதகமாக முடியும். உடன் பிறந்தோரின் ஆதரவும் கிட்டும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பவேண்டாம். விற்பனை முறையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். மகசூல் அதிகரிக்கும். நீர்வளம் பெருகும்.  

அரசியல்வாதிகளுக்கு உங்களது தனித்தன்மை வெளிப்படும். பொது சேவைகளில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு சீராக இருக்கும். திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 

பெண்மணிகள் உஷ்ணமான வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். சில சமயம் மெüனம் காப்பது நல்லது. கும். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த அக்கறை செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களைப் பெற்று தகுதியான மேற்படிப்பில் சேரலாம்.  

பரிகாரம்:  ஸ்ரீஆஞ்சநேயரையும், ஸ்ரீநரசிம்மரையும்  வணங்கி வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 01, 06. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com