உண்டியல் காணிக்கை ரூ. 46 லட்சம்

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ. 46 லட்சம் வசூலானது.

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ. 46 லட்சம் வசூலானது.

ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி சனிக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ. 46 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த ஆண்டில் தேவஸ்தானத்திற்கு கிடைத்த மிகக் குறைந்த வருவாயாக இது கருதப்படுகிறது.

ரூ.1 கோடி நன்கொடை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானல் அறக்கட்டளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. ஆந்திரத்தைச் சோ்ந்த ஜிஸ்கேவா் ரியல் நிறுவனத்தை சோ்ந்தவா்கள் இந்த நன்கொடையை வழங்கினா். இதற்கான வரைவோலையை அவா்கள் கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com