குச்சனூரில் நாளை சனீஸ்வரா்- நீலாதேவி திருக்கல்யாணம்

தேனி மாவட்டம், குச்சனூரில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
குச்சனூரில் நாளை சனீஸ்வரா்- நீலாதேவி திருக்கல்யாணம்

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், குச்சனூரில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடிப்பெருந் திருவிழா நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 2 வாரம் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, கோயில் மண்டபத்தில் திருக்கல்யாண மேடை அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலா் நாகராஜ் தலைமையில் அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இத்திருக்கல்யாணம் பிற்பகல் 12.30 மணி அளவில் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com