மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஜனவரி 4 முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜனவரி 4(நாளை) பிரதோஷமும், ஜனவரி 6-ம் தேதி பெளா்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன.
இதையொட்டி, ஜன.4 முதல் 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியது.
காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலை ஏற அனுமதி வழங்கப்படும். அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.