வானம்பாடிக் கவிதைகளில் வேர்பிடித்து, நவீனத்துவத்தில் கிளைவிரித்துப் பூத்திருக்கிற கவிதைமொழியில் தேர்ந்த கவிஞர் தங்கம் மூர்த்திக்கு மரபார்ந்த நவீனத்தோடு கூடிய எளிமையும் தெளிமையும் இயல்பாக கைவருகிறது.
மெளனத்தைப் பிழிந்தால் சொட்டுச்சொட்டாய் சொற்கள் உதிர்வதும், வானத்தில் எழுதினால் நட்சத்திரங்களாவதும், காற்றில் எழுதினால் பறவைகளாவதும், கவிதைக்கரத்தால் நதியைத் தொட அது திறந்துகொள்வதும், தமிழ்க் கவிதைக்கு அழகியல் மிளிரமிளிர அவர் வழங்கியிருக்கிற புத்தம்புது படிமங்கள். அவை வாசிப்பின்பத்தின் உச்சத்துக்கு நம்மை அழைத்துச்செல்பவை. அவை முழுமையான தனித்துவத்தோடும், தன்னளவில் ஒளிர்கிற ஒரு தத்துவச் சாயலோடும் வெளிப்படுகின்றன.
பல்வேறு சூழல்களில் இவரது கவிதைகளில் அணில்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. குயில் பறந்து சென்ற பிறகும் அதன் பாடல் இலைகளின் சலசலப்பில் தங்கிவிடுவதைப்போல தொகுப்பை வாசித்து மூடியபின்பும் நமக்குள் ஓடியாடியவாறிருக்கின்றன அணில்கள்.
எல்லாம் படித்து, எல்லாம் மறந்தபின் வடிகட்டிய மீதமாய் நமக்குள் தங்குவதுதான் ஒரு உன்னதமான படைப்பு. அவ்வகையில் தமிழ்க் கவிதையின் நெடிய வரிசையில் இக்கவிதைத் தொகுப்பு சேர்ந்துகொள்கிறது.
எம்.வி.வி.யின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர், இளம் வயதிலேயே அபூர்வமான - இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று நிரூபித்திருக்கும் - இலக்கியப் பித்துக்கு ஆட்பட்டுப்போனவர்.
அவரது இளைமைக்கால ஆவேசம் அவருடைய கனவின் ஒரு பகுதியைக் கூட நிறைவேற்றாமல் சிதைந்து போனதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?
மனதார அவர் ஏற்ற பணிக்குச் செலவிட்ட காலத்தையும் உழைப்பையும் விட பிழைப்புக்காக கேவலப்பட்ட மனத்துடன் செலவிட நிர்பந்திக்கப்பட்ட காலமும் உழைப்பும் அதிகம்.
எம்.வி.வி.யும் எவ்வளவோ நினைவுகளை நமக்குப் பதிவு செய்து தந்திருக்கக்கூடியவர்தான். இன்னும் எவ்வளவோ படைப்புகளையும் தந்திருக்கக்கூடியவர்தான். ஏன் தரவில்லை என்று அவரிடம் கேட்க நமக்கு யோக்கியதை இல்லை என்பதையும் இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.
மரணமும் இறப்பும் ஒன்றா, வேறு வேறா? மனம் என்றால் எது? அது உடம்பின் உள்ளே இருக்கிறதா, வெளியிலா? பேய் என்ற ஒன்று எல்லா காலத்திலும் உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே, எப்படி? எல்லா கேள்விகளுக்குமான நியாய எதார்த்த தன்மையுடன் கூடிய பதில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.
மனிதன் தனது இறப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா? முடியும் என்கிறது நாவல். அந்த காலத்து சித்தர்கள் அதைச் சாதித்துக் காட்டிய விதமும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
“ஆதுர சாலை” ஒரு மருத்துவ நாவல். இந்திய மண்ணின் மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் மேனியை அரித்து அழித்துவிட்ட கறையானாக அலோபதி திகழ்வதை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் விவரிக்கிறது.
பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்;
இவ்வளவுதானா இராசேந்திரசோழன்?
வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும் நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத ரகசியங்களால் நிரம்பி வழிவது.
இராசோ பெருங்கலைஞர். தமிழில் வாழ்க்கையின் விசித்திரங்களை வியந்து வியந்து எழுதிய புதுமைப்பித்தனையும், மிக மிக நுட்பமான உணர்வுகளைச் சின்னச்சின்ன வருணனைகளில் அபாரமாக எழுதிய தி.ஜானகிராமனையும் வியந்தவர்.
சமூகச் சிக்கல்களைத் தன் கட்டுரைகளில் பேசியவர். எந்த ஓர் எழுத்தாளனையும் முத்திரை குத்தியே பழக்கப்பட்டுப்போன சமூகம், இராசோ என்கிற அரசியல் போராளியை அடையாளப்படுத்திய தோழர்கள், இராசோ என்கிற கலைஞனை உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை.
இத்தொகுப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இராசோ என்ற பெருங்கலைஞனை உணர்ந்துகொள்ள வைப்பதே...
ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பயணம். மின்சாரம் - மின்னல் - மயிலிறகு - மாற்றம் - முறுவல் - மெளனம் - முத்தம் - மிதப்பு என எதுவும் தரலாம் ஒரு கதை. என்றபோதும், தருவதல்ல அதன் நோக்கம். மலர்வது மட்டும்தான். அதன் மணம் ஒரு நுழைவாயில்.
ஆண் பெண் காதலில் உறவில் உரிமையில் கால மாற்றங்களுக்கு ஏற்ப எத்தனையோ மாறுபாடுகள், இன்றைய கால கட்டத்தில் இரு உயிருக்குமான இணக்கம் , அந்த பிணைப்பு ஒரே நாளில் ஏற்படக்கூடியதா என்ன? எத்தனை எத்தனை பகிர்வுகள் , மோதல்கள், காதல் நிகழ்வுகள் , மனமுடைந்த தருணங்கள் இவையனைத்தையும்கடந்து நிற்கும் அன்பும் அணைப்பும் தானே நித்திய காதல் ஜோடிகளை ஊருக்கும் உலகுக்கும் ஏன் அவர்களுக்குமே அடையாளம் காட்டுகிறது. பிணைப்பில்லாத பிடியில்லாத அல்லது உறவை மன சகிப்பின்றி பொறுமையின்றி கைவிட்ட இணையர்கள்தானே கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் விவாகரத்து கேட்டு நடையாய் நடக்கிறார்கள் உருகி உருகி காதலித்து மணம் புரிந்த எத்தனை ஜோடிகள் நீதிமன்ற வாசலில் பிரித்து விட சொல்லி படியேறி கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம்பிரியவும் தோதின்றி சேரவும் மனம் இன்றி அந்தரத்தில் தவிக்கும் தம்பதிகள் எத்தனை எத்தனை மனச்சோர்வுகளோடு வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள். வாழ்வும்அதன் வழியே ஆணும் பெண்ணும் நிகழ்த்தும் வண்ணக்கோலங்களை மன உக்கிரங்களை ஷபியின் ரஃபியின் கண்கள் வழியே இனி இக்கதை வாயிலாக அனுபவித்து பார்க்கப்போகிறோம் .திம்மக்கா என்ற தேவதையின் திடீர் விஜயமும் வாழ்வின் ஆழ் பரிமாணங்களை கோணங்களை நமக்கு காட்டத்தான் போகிறது. மலையேறும் சிறு உயிரின் மனம் தான் இலக்கை அடைவோம் எண்றெண்ணியே துவங்குகிறது. காதல் செய்யும் உயிரின் உணர்வு தான் மகிழ்ந்து செழித்து இணைந்து வாழ்ந்திருப்போம் என்றே மனதை உருவேற்றுகிறது. பூமிக்கு மேலே ஆகாயம் இருப்பது போல், ஆகாயத்திற்கு மேலேயும் இன்னொரு ஆகாயம் இருக்குமா இல்லை இன்னொரு பூமி இருக்குமா என்று கேட்கும் வெகுளி பறவையாய் காதலுக்கும் நேசத்துக்கும் கூட அதைத்தாண்டிய இன்னொரு படிநிலை உண்டா என்ற கேள்வியோடு ஷபி ரஃபியின் வாழ்வை வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்.
பயாஜித் என்கிற சூஃபி ஞானியைப் பற்றிக் கூறுவர், அவர் மிகவும் மகிழ்ச்சியான மனிதர். ஏறக்குறைய பரவசமானவர்.
யாரும் அவரை மகிழ்ச்சியற்றோ, முகத்தைச் சுழித்தோ, குறை கூறியோ, சோகமாய் இருந்தோ, பார்த்ததே இல்லை. என்ன நிகழ்ந்தாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். சில நேரம் அங்கே உணவிருக்காது, ஆனால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார். சில நேரம் நாள்கணக்கில் உணவில்லாமல் இருப்பார். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார்.
யாரோ கேட்டார்கள், “பயாஜித், இப்பொழுதாவது உங்களுடைய சாவியை, ரகசியத்தைக் கூறுங்கள். உங்களுடைய ரகசியம்தான் என்ன?”
அவர் சொன்னார், “அங்கே ரகசியம் என்று எதுவும் இல்லை. அது ஒரு எளிமையான விஷயம். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் கண்களைத் திறக்கும்பொழுது, கடவுள் எனக்கு இரண்டு மாற்றுகளைக் கொடுப்பார். அவர் சொல்வார்: ‘பயாஜித், நீ மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறாயா? அல்லது மகிழ்ச்சியற்றா?’.
நான், “கடவுளே, நான் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறேன்’ எனக் கூறுவேன். அதோடு நான் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பேன், மகிழ்ச்சியாக இருப்பேன். அது ஒரு எளிமையான தேர்வு, அது ஒரு ரகசியமல்ல.”
மகிழ்ச்சியாகவோ, மகிழ்ச்சியற்று இருப்பதோ உன்னுடைய விருப்பம் என்று முடிவெடுக்கும் நாளில், வாழ்க்கையை நீ உன் கைகளில் எடுத்துக் கொள்கிறாய் - நீ குருவாகி விடுகிறாய். இப்பொழுது நீ வேறு யாரோ ஒருவர் உன்னைத் துயரமாக்குகிறார் என்று எப்பொழுதும் கூறமாட்டாய். அது அடிமை ஸாஸனம்.
நவீன காலகட்டத்தில் பரவலாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், உளவியலாளர்கள், நரம்பியல் மருத்துவர்கள் என்று பல தரப்பினரும் பதறும் நிலையை எட்டியிருக்கிறது மொபைல் போதை.
மொபைல் போதை எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்தே சமச்சீராகக் கெடுக்க ஆரம்பித்துவிடும். உதாரணமாக உட்கார்ந்தே இருப்பதால், கழுத்து, முதுகு, இடுப்பு வலிகள், கூடவே போனஸாக கண்களில் பாதிப்பு மற்றும் உடல் பருமன் அதிகமாதல்.
அதே சமயம் ஆண்ட்ராய்ட் என்பது கைக்குள் இருக்கும் உலகம் போலத்தானே? அதில் கிடைக்காதது இல்லையே? என்று கேட்டால், பதில், அது உண்மைதான். அதில் கல்வி, மருத்துவம், தொழில், பொதுதுபோக்குகள், ஆன்மீகம், நூல்கள் என்று எதுவும் கிடைக்கும், இது வரம் என்றும் நிச்சயமாகச் சொல்லலாம்.
ஆனால் என்ன நடக்கிறது? நாம் பணம் கொடுத்து வாங்கிய ஒரு கருவி, நம்மை, நமது நேரத்தை ஆளுமை செய்கிறது. உறவுகளைத் தீர்மானிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அதன் கட்டுப்பாட்டில் நம்மை முழுவதுமாக இழுத்துக் கொள்கிறது. நாமும் விருப்பத்துடன் அதன் பிடிக்குள் செல்கிறோம்.