சென்னை மடிப்பாக்கம் ஏரிக்கரை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலைகளில் தள்ளுவண்டிக் கடைகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.பார்த்திபன், மடிப்பாக்கம்.