சென்னை மாநகராட்சி 3-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 29-ஆவது வட்டத்தில் பள்ளிபாளையம் பெருமாள்கோயில் 2-ஆவது குறுக்குத் தெரு உள்ளது. இத்தெருவில் சாலை அமைக்கப்படாததால், அண்மையில் பெய்த மழை நீர் தெரு முழுவதும் தேங்கி உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சாலை அமைக்கவும், தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.இளஞ்செழியன், ராயபுரம்.