சென்னை நங்கநல்லூர் முதலாவது பிரதான சாலை, எந்நேரமும் வாகனங்கள் பயணிக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இதிலிருந்து பக்கவாட்டில் பிரியும் 24-ஆவது தெருவும் எந்நேரமும் நெரிசல் மிகுந்ததாகக் காணப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைத்து, "அதிக வேகம் ஆபத்து' என்ற விளம்பரப் பலகையையும் வைத்தால், விபத்துகள் குறையும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.